Sunday 19th of May 2024 05:04:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.குடாநாட்டை மிரட்டும் கொரோனா! ஒரே நாளில் 59 பேருக்கு தொற்றுறுதி!

யாழ்.குடாநாட்டை மிரட்டும் கொரோனா! ஒரே நாளில் 59 பேருக்கு தொற்றுறுதி!


யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 59 பேர் ஒரு நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட 51 பேர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

அவர்கள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

அதேவேளை,

யாழ்.போதனா வைத்தியசாலை தாதி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை,

மன்னாரில் ஒருவரும், வவுனியாவில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கில் இன்று 62 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE